Goseva brings in lots of happiness to the departed souls from your family
மனித வாழ்க்கையில் தாய்க்கு இணையான ஒரே உயிரினம் பசு. குழந்தை பருவத்தில் நமது வாயால் அம்மா என்று சொல்லும் முன் பலப்பல குழந்தைகளின் காதில் பசு எழுப்பும் அம்மா என்ற அந்த அமுதக் குரல் காதுகளை நிரப்பி இருக்கும்.
கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.
முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்திக்கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.